மலேசியா

ஒரு பெண்ணுக்காக அடித்துக் கொண்டார்களா? பினாங்கு கேளிக்கை விடுதி சண்டை தொடர்பில் 7 பேர் கைது

ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-18,

பினாங்கில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட சண்டை வன்முறையாக மாறிய சம்பவத்தில், 7 பேரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

இச்சம்பவம் ஏப்ரல் 10-ஆம் தேதி, ஜெலுத்தோங்கில் உள்ள கர்பால் சிங் சாலையில் நடந்தது.

சிலருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு, நாற்காலிகள் பறக்கும் அளவுக்கு பெரிதாகி சண்டையாக மாறியது.

சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து, 20 முதல் 40 வயதுக்குட்பட்ட 7 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட தொடக்கக் கட்ட விசாரணையில், ஒரு பெண்ணுக்காக அவர்கள் அடித்துக் கொண்டது தெரிய வந்தது.

இந்தச் சம்பவத்தில் பெரும் காயங்கள் எதுவும் பதிவாகவில்லை.

என்றாலும், கலவரத்தில் ஈடுபட்டதன் பேரில் சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!