
குவாலா சிலாங்கூர், ஜூன்-29- தொப்புள் கொடி அறுக்கப்படாத உயிருள்ள ஆண் சிசுவொன்று, குவாலா சிலாங்கூர், புக்கிட் ரோத்தான், கம்போங் அப்பி அப்பியில் பரிதாபமான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இரவு ஜமியுல் ஹூடா மசூதிக்கு அருகே சாலையோரம் பிளாஸ்டிக் பையினுள் அப்பச்சிளம் குழந்தையைக் கண்டு, பொது மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் சுங்கை பூலோ மருத்துவமனை போலீஸுக்குத் தகவல் கொடுத்ததாக, குவாலா சிலாங்கூர் போலீஸ் தலைவர் அசாஹாருடின் தஜுடின் கூறினார்.
2.135 கிலோ கிராம் எடையுடைய அக்குழந்தை, பிறந்து ஒரு வாரமே ஆகியிருக்கும் என தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
தற்போது தஞ்சோங் காராங் மருத்துவமனையில் அக்குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குழந்தையை வீசியதன் பேரில் குற்றவியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.
அச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள் போலீஸை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.