
கோலாலம்பூர், மே 6- நாட்டில் இயங்கும் சட்டவிரோத வெளிநாட்டு இ-ஹெய்லிங் தளங்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கத் தவறியதாக மலேசிய பி-ஹெய்லிங் ரைடர்ஸ் சங்கம் (Penghantar), நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் (Apad) மீது குற்றம் சாட்டியுள்ளது.
வெளிநாட்டு இ-ஹெய்லிங் தள ஓட்டுநர்கள், PSV (பொது சேவை வாகனம்) லைசென்ஸை வைத்திருப்பதையோ, வாகன ஆய்வுகளில் தேர்ச்சி பெற்றதையோ உறுதி செய்யாமல் தொடர்ந்து செயல்படுவது, Apad-இன் கவனக்குறைவைக் காட்டுகின்றது.
இது, ஓட்டுநர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பயணிகளின் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றதென்று Penghantar சங்கம் கூறியுள்ளது.
தொடர்ந்து தீர்க்கமான நடவடிக்கை எடுக்கத் தவறுவது, உயிர்களுக்கு ஆபத்தை விளைவித்து, பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும். மேலும் Apad-இன் விதிமுறைகளை மதிக்கும் உள்நாட்டு மின்-ஹெய்லிங் ஓட்டுநர்களின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்.
ஆகவே, Apad இதனைக் கருத்தில் கொண்டு, தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டுமென்று ஓட்டுநர் சங்கம் கேட்டுக் கொண்டது.