Latestஉலகம்

புது டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்; வீதிகளுக்கு ஓடிவந்த மக்கள்

புது டெல்லி, பிப்ரவரி-17 – இந்தியத் தலைநகர் புது டெல்லியை உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5.36 மணிக்கு ரிக்டர் அளவைக் கருவியில் 4.0-மாக பதிவான நிலநடுக்கம் உலுக்கியது.

இதனால் மாநகர மக்கள் பீதியடைந்தனர்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பதற்றத்தில் வெளியே ஓடி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி, நொய்டா, குருகிராம், காஜியாபாத் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

வட இந்திய மாநிலமான பீஹாரிலும் காலை 8 மணிக்கு அதே 4.0 magnitude அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும், இதுவரை கடுமையான சேதம் அல்லது காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

இவ்வேளையில், நில நடுக்கம் குறித்து தனது X தளத்தில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, நிலநடுக்கத்திற்குப் பிறகு தொடர் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் அமைதியாக இருக்கவும், வழிகாட்டுதல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் கேட்டுக் கொண்டார்.

நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் சொன்னார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!