Latestமலேசியா

பலகாரம் சாப்பிட்டதால் பூனையின் கழுத்தை நெருக்கிய வியாபாரி; போலீஸில் புகார்

ஜோர்ஜ்டவுன், மே-10- பினாங்கு, ஜோர்ஜ்டவுன் பசார் லெபோ செச்சில் உணவங்காடி நிலையத்தில் பூனை துன்புறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

வியாழனன்று 20 வயது உள்ளூர் பெண் அப்புகாரைச் செய்ததாக, தீமோர் லாவோட் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் அப்துல் ரொசாக் முஹமட் கூறினார்.

அன்று காலை 8 மணிக்கு நிகழ்ந்த சம்பவத்தில், உணவு வியாபாரியான ஓர் ஆடவர் பூனையின் கழுத்தை நெரித்ததைக் கண்டதாக அப்பெண் புகார் கூறியுள்ளார்.

எனினும் சம்பந்தப்பட்ட அந்த 55 வயது ஆடவர் அக்குற்றச்சாட்டை மறுத்து நேற்று பதில் புகார் செய்தார்.

இதையடுத்து, மேல் நடவடிக்கைக்காக MBPP எனப்படும் பினாங்கு மாநகர மன்றத்திடமே அச்சம்பவத்தை விட்டு விட போலீஸ் முடிவுச் செய்துள்ளதாக, அப்துல் ரொசாக் கூறினார்.

தான் விற்கும் பலகாரங்களில் ஒன்றை சாப்பிட்டதால் கோபத்தில் அப்பூனையின் கழுத்தை அவ்வாடவர் நெரித்தார்.

வலியால் மூச்சுத் திணறிய பூனை, அங்கேயே மலம் கழித்தும் விட்டது.

அதோடு நிற்காத அந்நபர், பூனையை ஒரு பிளாஸ்டிக் பையினுன் போட்டார்; நான் தான் அதனைக் காப்பாற்றினேன் என தனது சமூக ஊடகப் பதிவில் கூறியிருந்தது முன்னதாக வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!