
கோலாலம்பூர், மே-10- பிரிக்ஃபீல்ட்ஸ் சுற்று வட்டாரத்தில் பொது இடங்களிலும் மக்கள் நடைபாதைகளிலும் அனுமதியில்லாமல் வியாபாரிகள் போட்டிருந்த மேசை நாற்காலிகள் மற்றும் பிற பொருட்களை, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL சீல் வைத்துள்ளது.
ஜாலான் துன் சம்பந்தன், ஜாலான் தம்பிப்பிள்ளை சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட அந்த அமுலாக்க நடவடிக்கையில், 8 கடைகளின் பொருட்களுக்கு சீல் வைக்கப்பட்டன.
மேசை நாற்காலிகள் தவிர்த்து, கனோப்பி கூடாரங்கள், பெண்களின் அலங்காரப் பொருட்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலுமிரு அபராத நோட்டீஸ்களும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்ததன் பேரில் ஒரு நோட்டீஸும் வெளியிடப்பட்டன.
இது போன்ற அமுலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும்.
விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் நிச்சயம் நடவடிக்கை உண்டு என தனது facebook பக்கத்தில் DBKL எச்சரித்தது.