Latestமலேசியா

பூனையைத் தவிர்க்க முயன்ற காரோட்டி பெண்ணை மோதினார்; மருத்துவமனையில் உயிருக்குப் போராட்டம்

மலாக்கா, நவம்பர்-8, மலாக்கா, பத்து பெரண்டாமில் பூனையை மோதுவதைத் தவிர்க்க முயன்ற காரோட்டியால் மோதப்பட்டு, 37 வயது இல்லத்தரசி உயிருக்குப் போராடி வருகிறார்.

புதன்கிழமை நடந்த சம்பவத்தின் போது Taman Sutera Wangi-யில் உள்ள தனது வீட்டின் வெளியே அப்பெண் நின்றிருந்தார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென அப்பெண் மீதும், அருகிலிருந்த மற்றொரு கார் மீதும் மோதியது.

அதில் தலை, கால் மற்றும் இடுப்புப் பகுதியில் படுகாயமடைந்த Yeo May Fong, மலாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புதன் கிழமை இரவு அவருக்கு முக்கிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

பூனையைத் தவிர்க்க முயன்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக, அதன் ஓட்டுநரான 29 வயது பெண் தனது போலீஸ் புகாரில் கூறியுள்ளார்.

அச்சம்பவத்தில் சேதமடைந்த மற்றொரு காரின் உரிமையாளரும் அது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!