Latestமலேசியா

பெரிக்காத்தான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகும் ஆசை எனக்கில்லை – சனூசி விளக்கம்

தெமர்லோ, செப்டம்பர்-13, எதிர்கட்சியான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் (PN) பிரதமர் வேட்பாளராகும் ஆசையெல்லாம் தமக்கில்லை என்கிறார், கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனூசி நோர்.

அவ்வளவுப் பெரியப் பொறுப்புக்கெல்லாம் தாம் இன்னும் தயாராகவில்லை என, பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநருமான அவர் சொன்னார்.

தற்போதைக்கு கெடா மாநில நிர்வாகத்தை சீராக கொண்டுச் செல்வதே எனக்கு முக்கியம்.

என்றாலும், கட்சிக்கு கட்டுப்பட்டவன் என்ற முறையில், மேலிடம் என்ன சொல்கிறதோ அதைப் பின் பற்றி நடப்பேன் என்றார் அவர்.

பஹாங், தெமர்லோவில் நடைபெற்று வரும் பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு பேராளர் மாநாட்டில் பேசிய போது, பேராளர் ஒருவர் சனூசியின் பெயர் அடுத்தப் பிரதமர் வேட்பாளராக பரிசீலிக்கப்பட வேண்டுமென பரிந்துரைத்தார்.

சனூசி வலுவான தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டிருப்பதோடு, பொது மக்களுடனும் சகஜமாக பழகக் கூடியவர் என்பதால், அப்பொறுப்புக்கு அவர் சரியானவராக இருப்பார் என அப்பேராளர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!