![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-27-at-19.51.36_bba9300b.jpg)
கோலாலம்பூர் , மே 27 – சொத்து விவரங்களை வெளியிடும் தேதியை நீட்டிக்கும்படி மகாதீரின் இரண்டு மகன்கள் கோரியிருக்கும் விவகாரம் விசாரணை அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
மிர்ஷான் மகாதீர் மற்றும் டான்ஸ்ரீ மொக்ஸானி மகாதீர் ஆகியோர் தங்களது சொத்துக்கள் விவரங்களை வெளியிடுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும்படி விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக விசாரணை அதிகாரி மற்றும் வழக்கறிஞர்களிடையே பேச்சு நடைபெற்று வருவதாக எம்.ஏ.சி.சி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பக்கி தெரிவித்தார்.
தமக்கு தெரிந்தவரை மகாதீரின் இரண்டு மகன்களிடமிருந்து இன்னும் சொத்து விவரங்கள் கிடைக்கவில்லையென அவர் கூறினார். கால அவகாசத்தை நிர்ணயிப்பது குறித்து அண்மையில் விசாரணை அதிகாரி வழக்கறிஞர்களிடம் பேச்சு நடத்தியுள்ளார்.
எனவே இந்த விவகாரத்தை விசாரணை அதிகாரியிடம் விட்டுவிட்டதாக அசாம் பக்கி தெரிவித்தார். மொக்ஸானி மகாதீரும் அவரது சகோதரர் மிர்ஷானும் மே 25 மற்றும் மே 29 ஆம்தேதி சொந்து விவரங்களை வெளியிடவேண்டும் என இதற்கு முன் கூறப்பட்டிருந்தது