
கோலாலும்பூர், ஜூன் 11 – ஆசிய கோப்பை குரூப் F தகுதிச் சுற்றில் வியட்நாமை தோற்கடித்த தேசிய கால்பந்து அணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு நடந்த போட்டியின் போது, ஹரிமாவ் மலாயாவின் ஆட்டத்தை புகழ்ந்து பாராட்டி அன்வார் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
புக்கிட் ஜாலீல் தேசிய மைதானத்தில் நடந்த இப்போட்டியில், வெற்றி பெறுவதற்கு முழு உதவி மற்றும் ஆதரவை வழங்கிய மலேசிய பிரதமர் அன்வார் அவர்களுக்கும் மலேசிய அரசாங்கத்திற்கும், மலேசிய கால்பந்து சங்கம் (FAM) தனது நன்றியினை தெரிவித்து கொண்டது.
அடுத்த கட்டமாக ஹரிமாவ் மலாயா, சவுதி அரேபியாவில் நடைபெறும் 2027 AFC ஆசிய கோப்பை இறுதி தகுதிச் சுற்றுகளின் இரண்டாவது குரூப் F போட்டியில் இடம்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி சர்வதேச போட்டிகளில் ஹரிமாவ் மலாயாவின் செயல்திறனை மலேசிய அரசு தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றும், ஆசிய கால்பந்து போட்டியில் மலேசிய நிச்சயம் தனி இடத்தை பிடிக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.