Latestஉலகம்

ஏல்ப்ஸ் மலையில் பனிச்சரிவில் சிக்கி தந்தை – மகள் உட்பட 5 மலையேறிகள் பலி

ரோம், நவம்பர்-3,

இத்தாலியின் ஏல்ப்ஸ் மலைத் தொடரில் ஏற்பட்ட பயங்கர பனிச் சரிவில் புதையுண்டு, ஜெர்மனியைச் சேர்ந்த 5 மலையேறிகள் மரணமடைந்தனர்.

Cima Vertana மலைச் சிகரத்தை அடையும் இலக்கோடு அக்குழுவின் நேற்று முன்தினம் பயணத்தைத் தொடங்கினர்.

சிகரத்தை நெருங்கும் தருவாயில் துரதிஷ்டவசமாக பனிச்சரிவு ஏற்பட்டதில், பாதுகாப்புக் கையிற்றுடன் கட்டப்பட்டிருந்த 2 குழுவினர் பிரிந்து, பனிக்கட்டிகளால் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஒரு பெண் உட்பட மூவரின் சடலங்கள் சம்பவத்தன்றும், ஒரு தந்தை மற்றும் அவரின் 17 வயது மகளின் உடல்கள் நேற்றும் மீட்கப்பட்டன.

மேலுமிரு மலையேறிகள் எந்தவொரு காயமுமின்றி உயிர் தப்பினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!