Latestமலேசியா

லுப்தான்சா போயிங் 787 விமானத்தின் தரையிறங்கும் சக்கரத்தின் முன்பகுதி உடைந்தது; பலர் காயம்

பிராங்பர்ட், ஜூன் 5 – ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் ஒரு நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த லுப்தான்சா (Lufthansa) போயிங் 787-9 ரக விமானத்தின் முன்பகுதி தரையிறங்கும் சக்கரம் உடைந்ததில், பல ஊழியர்கள் காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நுழைவாயிலில் விமானம் நிலையாக இருந்தபோது, ​​அதன் முன்பகுதி திடீரென ஓடுபாதையில் சரிந்தது.

இணையத்தில் பரவி வரும் காணொளிக் காட்சிகளில், விமானம் தரையில் நிலைபெறும்போது அதன் முன்பகுதி வேகமாகத் தாழ்வதும், ஒரு பேனல் கழன்று விழுவதையும் காணமுடிந்தது.

அச்சம்பவத்தின்போது விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை என்று லுப்தான்சா நிறுவனம் தெரிவித்தது.

பயணிகள் இன்னும் விமானத்தில் ஏறவில்லை என்று அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் நடந்தபோது விமானப் பணியாளர்களும் தரைப்பணியாளர்களும் விமானத்தில் இருந்தனர்.

பல ஊழியர்கள் காயமடைந்ததால் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விமானம் சரிந்த பிறகு, அவசரகால வாகனங்கள் அந்த பெரிய விமானத்தைச் சூழ்ந்திருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஜெட் விமானம், பிராங்பர்ட்டிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!