
கோலாலம்பூர், ஏப்-15-வெப்பநிலை 37.5°C செல்சியஸ்வரை உயரும் நிலையில், மலேசியா கடுமையான, நீடித்த வறட்சியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.
மேலும், கடும் வெப்பமும் தண்ணீர் பற்றாக்குறையும் குறைந்தபட்சம் ஜூன் மாதம் வரை நீடிக்கும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.
நாடு அதிகாரப்பூர்வமாக அதிக அபாயமுள்ள வானிலை நிலைக்குள் நுழைந்துவிட்டதாக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்தர் ஜோசுப் குருப் ( Arthur Joseph Kurup) உறுதிப்படுத்தினார்.
முயற்சிகள் இருந்தபோதிலும், மிகவும் சவாலான மாதங்கள் இன்னும் வரவிருக்கின்றன என்று அவர் எச்சரித்தார்.
வரவிருக்கும் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள், ஜூன் மாதம் வரையிலும் கூட மிகவும் வறட்சியான மாதங்களாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். த
ற்போது வெப்பநிலை இன்னும் அதிகமாக உயர்ந்து வருவதை நாங்கள் கவனிக்கிறோம் என அவர் கூறினார்.
வெப்பநிலை சுமார் 37.5°C செல்சியஸை எட்டும் என எங்களுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால் , நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், என்று அனைத்துலக நிலைத்தன்மை வாரம் 2026 (ISW 2026)-இன் தொடக்க விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஆர்தர் ஜோசப் குருப் தெரிவித்தார்.
தற்போதைய பருவமழை மாற்றத்தால் ஏற்பட்ட வெப்ப அலை, முக்கிய நீர் கையிருப்பை ஏற்கனவே குறைக்கத் தொடங்கியுள்ளது.
அரசாங்கம் அண்மையில் கெடா, பெர்லீஸ், பேராக், மலாக்கா மற்றும் ஜோகூர் முழுவதும் முதல் கட்ட மேக விதைப்புப் பணியை மேற்கொண்ட போதிலும், வரவிருக்கும் தண்ணீர் நெருக்கடிக்கு அதன் முடிவுகள் இன்னும் ஓர் உறுதியான தீர்வை வழங்கவில்லை என்பதையும் (Arthur Joseph Kurup) ஒப்புக்கொண்டார்.



