Latestமலேசியா

லஞ்சம் கோரிய இரண்டு போலீஸ்காரர்கள் தடுத்து வைப்பு

கோலாத்திரெங்கானு, மே 5 -சூதாட்டம் மற்றும் போதைப் பொருள் குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு லஞ்சம் கேட்டது மற்றும் 5,000 ரிங்கிட் லஞ்சம் பெற்ற சந்தேகம் தொடர்பில் இரண்டு போலீஸ்காரர்களை MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தடுத்து வைத்துள்ளது.

அவ்விருவரையும் இம்மாதம் 11ஆம் தேதிவரை தடுத்து வைக்கும் உத்தரவை நீதிபதி முகமட் சுல் ஸைகுடின் சுல்கிப்லி ( Mohd Zul Zaiqudin Zulkifli) இன்று பிறப்பித்தார். நேற்று நண்பகல் திரெங்கானு MACC அலுவலகத்திற்கு வாக்குமூலம் வழங்க வந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முதல் சந்தேகப் பேர்வழியான 50 வயது அதிகாரி 2024ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தனிப்பட்ட நபர் ஒருவரிடமிருந்து சுமார் 3,000 ரிங்கிட் லஞ்சம் கே பெற்றுள்ளார்.

இதனிடையே 40 வயதுடைய இரண்டாவது அதிகாரி 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் 2023 ஆம்ஆண்டு மே மாதத்திற்குமிடையே போதைப் பொருள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்காக தனிப்பட்ட நபரிமிருந்து 2,000 ரிங்கிட்டை லஞ்சமாக பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் தங்களது வங்கிக் கணக்கின் மூலம் அந்த லஞ்சப் பணத்தை பெற்றுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டதை திரெங்கானு MACC இயக்குநர் ஹஸ்ருல் சஸ்ரின் அப்துல் யாஷிட் ( Hazrul Shazreen Abdul Yazid ) உறுதிப்படுத்தியதோடு 2009ஆம் ஆண்டின் ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் கீழ் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!