Latestமலேசியா

அதிகரித்து வரும் சுகாதாரச் செலவுகளைச் சமாளிக்க புதிய அமைச்சரவைக் குழு

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 25 – மலேசியாவில் மலிவு விலையில் தனியார் சுகாதாரப் பராமரிப்பை உறுதி செய்யும் நோக்கில், நிதி மற்றும் சுகாதார அமைச்சுகள் தனியார் சுகாதாரச் செலவுகள் குறித்த கூட்டு அமைச்சர் குழுவொன்றை (JMCPHC) அதிகாரப்பூர்வமாக நிறுவியுள்ளன.

இன்று தனது முதல் கூட்டத்தை நடத்திய இக்குழு, மருத்துவ பணவீக்கத்தை நிர்வகிப்பதிலும், தனியார் சுகாதாரத் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதிலும் முழு நாட்டு அணுகுமுறையையும் ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த புதிய அமைச்சரவைக் குழுவில், இரண்டாம் நிலை நிதியமைச்சர் அமீர் ஹம்சா அசிசான் மற்றும் சுகாதார அமைச்சர் துல்கெஃப்லி (Dr Zulkefly) அஹ்மத் ஆகியோர் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொது மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலைக் குறைத்து, மதிப்பு அடிப்படையிலான பராமரிப்பைத் தழுவி, செலவு குறைந்த விருப்பங்களை விரிவுபடுத்துவதன் மூலம் தனியார் சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகலை மேம்படுத்துவதே இந்தக் குழுவின் நோக்கமாகும் என்று Dr Zulkefly கூறியுள்ளார்.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள், பகல்நேர பராமரிப்பு மற்றும் உள்நோயாளி சேவைகளுக்கு “பிரீமியம் பொருளாதாரம்” சேவைகளை வழங்கும் ரக்கன் கே.கே.எம் போன்ற தற்போதைய திட்டங்களை மேம்படுத்தவும் இக்குழு முயற்சிக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!