Latestஉலகம்

அதீத வெப்பத்தால், ஆண்டுதோறும் ஐந்து லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் ; ஐநா அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன், ஜூலை 26 – அதீத வெப்ப அலையால், ஆண்டுதோறும் கிட்டதட்ட அரை மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர்.

அந்த எண்ணிக்கை, வெப்ப மண்டல சூறாவளிகளில் உயிரிழப்பவர்களை காட்டிலும் 30 மடங்கு அதிகம் என, ஐநாவின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) கூறியுள்ளார்.

2023-ஆம் ஆண்டு ஜூன் தொடங்கி, ஒவ்வொரு மாதமும் அதீத வெப்பமான மாதமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் பூமியில் பதிவுச் செய்யப்படும் வெப்பம் அதிகரித்து வருவதை அது காட்டுகிறது.

அதனால், உலகிலுள்ள 70 விழுக்காட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

23 மில்லியன் வேலையிட விபத்துகள் பதிவுச் செய்யப்பட்டுள்ள வேளை ; ஆண்டுதோறும் 19 ஆயிரம் மரணங்கள் பதிவுச் செய்யப்படுகின்றன.

இவ்வாண்டு, ஹாஜ் யாத்திரையின் போது ஆயிரத்து 300 பேர் உயிரிழந்த வேளை ; பள்ளிகள் மூடப்பட்டதால், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை சேர்ந்த சுமார் 80 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

2050-ஆம் ஆண்டு வாக்கில், இந்நிலை மோசமடையலாம் என ஆய்வுகள் காட்டுகின்றன.

அதனால், காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட, தீவிர வெப்பத்தை தணிக்க வேண்டியதன் அவசர தேவையை உலக நாடுகள் உணர வேண்டுமென குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, உலகம் தனது அதீத வெப்பமான நாளை பதிவுச் செய்த சில நாட்களுக்கு பின்னர், முதல் முறையாக அதிகரிக்கும் வெப்பத்தை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டுமென குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!