Latestமலேசியா

அம்பாங் ஜாலான் உலு கிள்ளானில் உள்ள பாலர் பள்ளியில் வெள்ளம்; 21 மாணவர்கள் மீட்பு

அம்பாங், அக்டோபர்-15 – தொடர் கனமழையால் அம்பாங், ஜாலான் உலு கிள்ளானில் உள்ள பாலர் பள்ளியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 21 மாணவர்களை, சிலாங்கூர் தீயணைப்பு-மீட்புத் துறை காப்பாற்றியுள்ளது.

உதவி வந்து சேரும் வரை மாணவர்கள் மேசைகளின் மேல் ஏறி நின்ற வீடியோ முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.

வெள்ள நீர் மட்டம் உயர்ந்ததால் மாணவர்களில் சிலர் அழுவதையும் அதில் காண முடிந்தது.

எனினும் தீயணைப்பு-மீட்புப் படையினர் மாணவர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் வைத்தனர்.

பின்னர் அவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தீயணைப்புக் குழுவினர் வந்து சேரும் போது வெள்ள நீர் வற்றத் தொடங்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!