
அஹமதாபாத், ஜூன்-15,
அஹமதாபாத்தில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டியும் மீட்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் மொத்தமாக 274 பேர் உயிரிழந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட இந்த கருப்புப் பெட்டிகள், விபத்திற்கான காரணங்களை கண்டறிய விசாரணை அதிகாரிகளுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கருப்புப் பெட்டி, விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை பிற்பகலில் அஹமதாபாத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. பயணிகள் பணியாளர்கள் என 242 பேரில் ஒரேயொருவரைத் தவிர மற்ற அனவரும் அதில் பலியாகினார்.
விமானம் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் விடுதியின் மேல்மாடிக்கு மேல் விழுந்ததில் அங்கு மட்டுமே 33 பேர் உயிரிழந்தனர்.