Latestமலேசியா

ஆங்கிலப் புலமைக் குறியீட்டில் ஆச்சரியமான முன்னேற்றம்; பேராக் – கெடா மாநிலங்களுக்கு முதலிடம்

கோலாலம்பூர், மே-29 – மலேசியாவில் ஆங்கிலப் புலமை என வரும் போது பேராக் மாநில மக்களே முதலிடம் வகிப்பது ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

2024-ஆம் ஆண்டுக்கான EF ஆங்கிலப் புலமைக் குறியீட்டுப் பட்டியலில் 585 புள்ளிகளுடன் பேராக் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மிக மிக நெருக்கத்தில் 584 புள்ளிகளுடன் கெடா இரண்டாமிடத்தையும், 583 புள்ளிகளுடன் பினாங்கு மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.

பஹாங்கும் சரவாக்கும் 580 புள்ளிகளையும் சிலாங்கூர் 575 புள்ளிகளையும் பெற்றுள்ளன.

நாம் எதிர்பார்க்காத மாநிலங்களில், மக்களிடையே ஆங்கிலப் புலமை கணிசமாக உயர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக உள்ளூர் வட்டார வழக்குக்கு புகழ்பெற்ற மாநிலமான பேராக்கில், ஆங்கில புலமைப் பெற்றோரின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், மலேசியா உலகில் 26-ஆவது இடத்தை வகிக்கிறது.

ஆசிய அளவில், பிலிப்பின்ஸ் மற்றும் சிங்கப்பூருக்கு அடுத்து நாம் மூன்றாமிடத்தில் உள்ளோம்.

இதுவே நகரங்கள் வாரியாகப் பார்த்தால் 598 புள்ளிகளுடன் ஷா ஆலாம் முதலிடத்திலும் 585 புள்ளிகளுடன் கோத்தா பாரு இரண்டமிடத்திலும் 584 புள்ளிகளுடன் கோலாலம்பூர் மூன்றாமிடத்திலும் உள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!