Latestமலேசியா

ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலையில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆடவரின் அழுகிய சடலம் கண்டெடுப்பு

கோலாலம்பூர், மே-15 – கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலையில் Hard Rock Cafe எதிர்புறத்தில், ஓர் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் மரங்களுக்கு இடையில் சடலம் தொங்கிக் கிடந்தது பொது மக்கள் கண்டு தகவல் கொடுத்ததாக, டாங் வாங்கி போலீஸ் தலைவர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் கூறினார்.

போலீஸ் வந்து பரிசோதித்ததில், சடலம் அழுகத் தொடங்கியிருந்தது கண்டறியப்பட்டது.

இனம் வயது உள்ளிட்டவை இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை.

இறந்துபோனவர் பளுப்பு நிற டி-சட்டையும் இள நீல அரைக்கால் சட்டையும் நீல நிற செருப்பும் அணிந்திருந்தார்.

உடலில் அடையாள ஆவணங்கள் எதுவும் காணப்படவில்லை.

கோலாலம்பூர் மருத்துவமனையில் இன்று சவப்பரிசோதனை நடைபெறும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!