
செனவாங், ஜூன் 16 – கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், நெகிரி செம்பிலான் செனாவாங் தாமான் பண்டார் சிரம்பானிலுள்ள ஒரு காலி வீட்டின் முன், இந்திய பிரஜையான எம். செல்வம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய காமராஜுக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் குமாரவேலனுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்காகக் காத்திருக்கும் தருவாயில் தனபாலன் மாரடைப்பால் இறந்துள்ள நிலையில் மற்ற இருவருக்கும் விசாரணைக்கு பிறகு தகுந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றவாளி இருவரும் தங்கள் தண்டனையைக் குறைக்க செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காமராஜின் காதலி செல்வத்திடம் குறிப்பிட்ட தொகையை கொடுத்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் இக்கொலையை செய்துள்ளாதாக தெரிய வந்துள்ளது.