
தஞ்சோங் மாலிம், ஜூன்-20 – 36 இந்திய சுற்றுப்பயணிகளை ஏற்றியிருந்த விரைவுப் பேருந்து, பேராக், தஞ்சோங் மாலிம் அருகே PLUS நெடுஞ்சாலையில் நேற்று மாலை விபத்துக்குள்ளானது.
கோலாலம்பூரிலிருந்து ஈப்போ செல்லும் வழியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் வலப்புறம் தடம்புரண்டு, சாலை மையத் தடுப்பை மோதி நின்றது.
அதிர்ஷ்டவசமாக பேருந்திலிருந்த 4 பெண்கள் உள்ளிட்ட 36 இந்தியப் பிரஜைகளும் காயங்களின்றி உயிர் தப்பினர்.
முவாலிம் போலீஸ் தலைவர் ஹாஸ்னி நாசீர் அதனை உறுதிப்படுத்தினார்.
பயணிகள் பின்னர் வேறொரு பேருந்தில் பயணத்தைத் தொடர்ந்தனர்.