Latestஉலகம்

உத்தர பிரதேசத்தில் குழந்தைகளுக்காக online-னில் வாங்கிய ஐஸ்கிரீமில் செத்துப் போன பூரான்; அதிர்ச்சில் உறைந்த பெண்

நொய்டா, உத்தர பிரதேசம் – ஜூன்-17 – இந்தியா, உத்தர பிரதேசத்தில் online-னில் ஐஸ் கிரீம் வாங்கியப் பெண்ணுக்கு, பூரான் உருவத்தில் அவர் கனவிலும் நினைத்து பார்த்திராத அதிர்ச்சி காத்திருந்தது.

தீபா எனும் அப்பெண், தன் குழந்தைகளுக்கு Mango Shake செய்துக் கொடுப்பதற்காக பிரபல ஐஸ் கிரீம் நிறுவனமான அமுல் ஐஸ்கிரீமிடம் (Amul Icecream) family pack ஐஸ்கிரீம் வாங்கியுள்ளார்.

ஆசையோடு ஐஸ்கிரீம் டப்பாவைத் திறந்த போது, அதில் ஐஸ்கிரீமோடு உறைந்துப் போன பூரான் இருப்பதைக் கண்டு தீபா பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

கோபத்தில் அதனை சமூக ஊடகங்களில் அவர் பகிர, அச்சம்பவம் வைரலாகியுள்ளது.

இது குறித்து, தான் ஐஸ்கிரீம் வாங்கிய online தளத்திடம் தீபா புகார் கொடுக்க, அவருக்கு மொத்தப் பணம் திருப்பித் தரப்பட்டுள்ளது.

மேலும் அப்புகாரை அமுல் நிறுவனத்தின் கவனத்துக்குக் கொண்டுச் செல்வதாகவும் அவரிடம் உறுதியளிக்கப்பட்டது.

ஏற்கனவே மும்பையில் ஐஸ்கிரீமில் மனித விரல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ‘பூரான்’ ஐஸ்கிரீம் காணொலி இந்திய நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற சம்பவங்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த கவலையை ஏற்படுத்துவதாகக் கூறிய அவர்கள், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!