
கோலாலம்பூர், ஜூன் 29 – உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்து வருவதால், அதன் பலன் மக்களுக்கு கிடைக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீர் (Akmal Nasrullah Mohd Nasir) தெரிவித்தார்.
வியாபாரிகள் எண்ணெய் விலை குறைந்த பிறகும் பொருட்களின் விலையை அதிகமாக வைத்திருக்காமல் இருப்பதை அரசு கண்காணிக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், மேற்காசிய மோதலால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 5 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு 700 மில்லியன் ரிங்கிட் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



