Latestமலேசியா

உலு சிலாங்கூரில் ஒரு வாரமாகக் காணாமல் போனவர் சாலையோர புதரில் சடலமாக மீட்பு

உலு சிலாங்கூர், ஜூன்-17 – உலு சிலாங்கூரில் ஒரு வாரமாகக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஆடவர், Felda Soeharto-வில் சாலையோர புதரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

57 வயது அந்நபர், Honda EX5 மோட்டார் சைக்கிள் அருகே இறந்துக் கிடந்த நிலையில்
சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டார்.

கிள்ளான், தாமான் செந்தோசாவில் உள்ள தனது வீட்டில் இருந்து சிகரெட் வாங்குவதற்காக வெளியில் கிளம்பியவர் வீடு திரும்பாததைக் கண்டு சந்தேகமுற்ற அவரின் 29 வயது மகன் ஜூன் 9-ஆம் தேதி கிள்ளான் போலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

Felda Soeharto-வில் உள்ள பெரிய சாலையைக் கடக்கும் போது அவரின் மோட்டார் சைக்கிள் தடம் புரண்டு புதரில் விழுந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் மொஹமட் அஸ்ரி மொஹமட் யூனுஸ் (Mohd Asri Mohd Yunus) கூறினார்.

குவாலா குபு பாரு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சவப்பரிசோதனையில், நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தாலேயே அவர் உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசைத் தொடர்புக் கொண்டு விசாரணைக்கு உதவுமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!