Latestஉலகம்

எப்போது, எப்படி பூமிக்குத் திரும்புவோம் என தெரியாமல் விண்வெளியில் 55 நாட்களைக் கடந்து விட்ட சுனிதா வில்லியம்ஸ்

வாஷிங்டன், ஜூலை,27 – ஒரு வார பயணமாக அனைத்துலக விண்வெளி நிலையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ், 55 நாட்களைக் கடந்தும் இன்னும் பூமி திரும்பவில்லை.

சுனிதாவும் அவரின் சகாக்களும் எப்போது, எப்படி பூமி திரும்பப் போகிறோம் என்பது தெரியாமல் விண்வெளியில் நாட்களைக் கடத்தி வருகின்றனர்.

எனினும் அவர்கள் 9 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அவர்கள் விண்வெளிக்கு பயணித்த Boeing நிறுவனத்தின் ஸ்டார்லைனர் கேப்சூல் (Starliner Capsule) விண்கலத்தில் ஏற்பட்டுள்ள ஹீலியம் கசிவு, த்ரஸ்டர் (Truster) செயலிழப்பு போன்றவற்றுக்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் நாசா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

8 நாள் ஆய்வுப் பணிகளுக்காக, ஜூன் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் (Butch Wilmore) இருவரும் starliner-ரில் அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாநிலத்திலிருந்து அனைத்துலக விண்வெளி நிலையம் புறப்பட்டனர்.

ஆனால், ஹீலியம் கசிவு உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

அவர்கள் பயணித்த விண்கலத்திலேயே பூமிக்கு திரும்புவார்களா அல்லது வேறு விண்கலத்தில் வருவார்களா என்பதும் முடிவுச் செய்யப்படாமலிருக்கிறது.

Starliner விண்கலம் 90 நாட்கள் வரை மட்டுமே விண்வெளியில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!