Latestமலேசியா

கடையில் 2 டின் பீர், RM145 கொள்ளை; ஆடவருக்கு 4 ஆண்டு சிறை & ஒரு பிரம்படி

தெலுக் இந்தான், ஜூலை 15 – அடுத்த மாதம் திருமணம் செய்யவிருந்த ஆடவர் ஒருவர்   தெலுக் இந்தானில் உள்ள ஒரு கடையில்   இரண்டு  டின் பீர்  மற்றும்  145 ரிங்கிட் ரொக்கம்  கொள்ளையிட்ட குற்றச்சாட்டை  ஒப்புக் கொண்டதை தொடர்ந்து   அவருக்கு 4 ஆண்டு சிறை மற்றும் ஒரு பிரம்படி விதிக்கப்பட்டது. செஷன்ஸ் நீதிமன்ற   நீதிபதி  இன்தான்  நுருல்  பரினா ஜைனால் அபிடின்  (  Intan Nurul Farena Zainal Abidin ) முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது  33 வயதுடைய  நெர்வின் ராவ் ( Nervin Rao ) அதனை ஒப்புக் கொண்டார்.   

 கார் கழுவும் வேலை செய்பவரான  அந்த ஆடவர் ஜூலை  9 ஆம் தேதி தெலுக் இந்தான் , ஜாலான் பண்டாரில் , 24 மணி நேரம் செயல்படும் கடையில்    விடியற்காலை  மணி 5.14 அளவில்  இக்குற்றத்தை புரிந்ததாக  குற்றஞ்சாட்டப்பட்டார்.  கைது செய்யப்பட்ட  ஜூலை  11 ஆம்  தேதியிலிருந்து  தண்டனையை அனுபவிக்கும்படி  நெர்வின் ராவுக்கு நீதிபதி  இந்தான்  நுருல்   பரெனா  (  Intan Nurul  Farena ) உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!