
பெட்டாலிங் ஜெயா, மே 26 – 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் மரணம் தொடர்பான வழக்கில்,குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் தேர்தல் வேட்பாளர் 58 வயதான லாவ் செக் யானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு, சிரம்பான் 2, ராசா கெமாயானிலுள்ள தனது வீட்டில், தனது கணவருக்கு உடல் ரீதியான காயத்தை ஏற்படுத்தி மரணம் விளைவித்த வழக்கில் லாவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு போர்டிக்சன் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட லாவ், இதற்கு முன்பு தனது குற்றத்தை நீதிமன்றத்தில் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து, சிறைத்தண்டனை அனுபவிக்கும் லாவ்-இன் தண்டனைக் காலத்தை குறைக்க, அவரது வழக்கறிஞர் வாதாடிய போதும், குற்றத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு நீதிபதி அக்கோரிக்கையை நிராகரித்துள்ளார்.