Latestமலேசியா

கலகத் தடுப்பு போலீஸ்காரர்களின் மரணம் தொடர்பில் லோரி ஓட்டுநருக்கு எதிராக 9 குற்றச்சாட்டுக்கள்

தெலுக் இந்தான், மே 17 – தெலுக் இந்தான் Jalan Chikus -Sungai Lampam மில் கடந்த செவ்வாய்க்கிழமை கலகத் தடுப்பு போலீஸ் பிரிவைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்களின் உயிரைப் பறித்த கோர விபத்து தொடர்பில் கற்களை ஏற்றிச் சென்ற லோரி ஓட்டுநருக்கு எதிராக இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் 9 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

1987ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்து சட்டத்தின் 41ஆவது பிரிவு (1)ன் கீழ் கொண்டுவரப்பட்ட அந்த ஒன்பது குற்றச்சாட்டுக்களையும்
45 வயதுடைய ரூடி சுல்கர்னைன் ( Rudi Zulkarnain Mat Radi ) என்பவர் மறுத்தார்.

ஹிலிர் பேராக் மாவட்டத்தில், ஜாலான் சுங்கை மாணிக்கின் 15ஆவது கிலோமீட்டரில் மே 13 ஆம் தேதி, காலை மணி 9.05 அளவில் ஒன்பது பேர் உயிரிழந்ததற்கு காரணமாக , பொதுமக்களுக்கு ஆபத்தான முறையில் ஹினோ லோரியை ஓட்டியதாக ரூடி சுல்கர்னைன்
மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஒவ்வொரு குற்றத்திற்கும் அந்த நபருக்கு 6000 ரிங்கிட் ஜாமீன் வழங்க நீதிமன்றம் அனுமதித்ததோடு இந்த வழக்கை விசாரிப்பதற்கு ஜூன் 17 ஆம் தேதியன்று நிர்ணயித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!