Latestமலேசியா

காற்பந்து விளையாட்டில் தொடர்ந்து பங்கேற்பதில் ஆர்வமாக இருக்கிறேன் – பைசால் ஹலிம்

கோலாலம்பூர், ஜூன் 13 – காற்பந்து விளையாட்டில் தொடர்ந்து  கவனம் செலுத்துவதில்  ஆர்வமாக இருப்பதாக சிலாங்கூரின்  முன்னணி நட்சத்திர விளையாட்டாளரான   பைசால்    ஹலிம்  (Faisal Halim ) தெரிவித்திருக்கிறார்.  கடந்த மாதம்   வர்த்தக மையத்தில்    எரிதிரவாக தாக்குதலுக்கு உள்ளானதால் ஒரு மாத காலம் ஓய்வில் இருந்த பிறகு  மீண்டும் காற்பந்து விளையாட்டில் களம் இறங்குவதற்கு  தயாராய் இருப்பதாகவும்  அதற்கு முன்னதாக விரைவில்   தீவிர சிகிக்சையை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக அவர்  கூறினார்.  

தமது சக நண்பர்கள்  தேசிய காற்பந்து   குழுவிலும்,  சிலாங்கூர் காற்பந்து குழுவிலும்   விளையாடிவருவதை பார்க்கையில்    விரைவில் காற்பந்து விளையாட்டிற்கு திரும்ப வேண்டும் என்ற ஏக்கம் அதிகமாக  இருப்பதாக ஹரிமாவ் மலேசியா மற்றும்  சிலாங்கூர் குழுவின்   முக்கிய ஆட்டக்காரராகவும் இருந்துள்ள   பைசால்  தெரிவித்தார். 

காற்பந்து விளையாட்டை நான் அதிகமாக நேசிக்கிறேன். தொடர்ந்து பயிற்சி மற்றும் விளையாட்டில் கவனம்  செலுத்த  விரும்புகிறேன்.  அதே வேளையில் பழையபடி முழுமையாக காற்பந்து விளையாடுவதற்கு  உடல் ரீதியில் தாம் தயாராக வேண்டியுள்ளது,  தாம் மீண்டும்  விளையாடுவதற்கு  மருத்துவரின் அனுமதிக்காக  காத்திருப்பேன். எல்லாவற்றுக்கும் மேலாக  பழையபடி  விளையாடுவதற்கான வாய்பை பெறுவதற்கான முயற்சியிலும்  ஈடுபடப் போவதாகவும்   பைசால்  தெரிவித்தார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!