Latestமலேசியா

கிரிக்கில் தொண்டையில் ரம்புத்தான் பழம் சிக்கி 72 வயது மாது மரணம்

கிரிக், ஜூலை 16 – கிரிக்கில் (Gerik) தொண்டையில் ரம்புத்தான் பழம் சிக்கிக்கொண்டதாக நம்பப்படும் 72 வயது மாது ஒருவர் மரணம் அடைந்தார். Lawin கிளினிக்கல் சிகிச்சை மேற்கொண்டிருந்தபோது நேற்றிரவு 8.30 மணியளவில் அவர் இறந்ததாக கிரிக் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan சுல்கிப்லி மாமுட் (Zulkifli Mahmood ) தெரிவித்தார்.

பெல்டா Lawinனிலுள்ள வீட்டில் தனது தயாரின் தொண்டையில் ரம்புத்தான் பழம் சிக்கிக் கொண்டதாக அவரது 46 வயது மகன் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் உடனடியாக Lawin KK கிளினிக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

தொண்டையில் சிக்கிக் கொண்ட ரம்புத்தானை எடுப்பதற்கு மருத்துவர் முயன்றபோது அந்த மாது இறந்ததாக சுல்கிப்லி மாமுட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

கிரிக் மருத்துவமனையின் சவப் பரிசோதனையின் தடயவியல் பிரிவு மேற்கொண்ட விசாரணையில் அந்த மாது சுவாசிப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இறந்ததாகவும் அதனை திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டதாக சுல்கிப்லி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!