Latestமலேசியா

கிழக்கு சபா மண்டல தரை பிரிவுக்கான நடவடிக்கை தலைவர் டத்தோ எம். சந்திரசேகரன் காலமானார்

Esscom எனப்படும் சபா கிழக்கு மண்டல தரை நடவடிக்கை பிரிவின் தலைவரான 56 வயதுடைய டத்தோ M. Chandra காலமானார். நேற்று காலை ஏழு மணியளவில் Likas, Kingfisher-ரிலுள்ள தமது வீட்டில் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்ட Chandra உடனடியாக Likas மருத்துமவனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டுச் செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் அவருக்கு முதலுதவி வழங்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும் அவரிடமிருந்து எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. இதனை சபா போலீஸ் கமிஷனர் டத்தோ Jauteh Dikun உறுதிப்படுத்தினார். Chandra இறந்த நேரம் மற்றும் அவரது மரணத்திற்கான காரணத்தை Jauteh Dikun தெரிவிக்கவில்லை.

அவரது உடல் சவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் இருப்பதை Jauteh Dikun உறுதிப்படுத்தினார். ஆகக்கடைசியாக நேற்று காலை மணி 5.18 அளவில் Chandra -விடமிருந்து குறுஞ்செய்தியை பெற்றதாக அவர் கூறினார். காலை மணி 8.45 அளவில் Chandra இறந்தார் என்பது மட்டுமே தமக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவரது மரணத்திற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லையென அவர் கூறினார்.

சவப் பரிசோதனைக்குப்பின் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் இறுதி மரியாதை செலுத்த Chandra -வின் உடல் Wisma Fook Lu Siew- விற்கு கொண்டுச் செல்லப்படும். காலம்சென்ற Chandra 1994ஆம் ஆண்டு போலீஸ் படையில் இணைந்தார். 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டுவரை அவர் கோத்த கினபாலு மாவட்ட போலீஸ் தலைவராக இருந்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!