
செகாமாட், மே-15 – ஜோகூர், செகாமாட், பூலோ கசாப்பில் ஊரார் பூனையை அடித்து, மனிதாபிமானமற்ற முறையில் அதனை காலி வீட்டில் தூக்கி வீசிய 70 வயது முதியவர் கைதாகியுள்ளார்.
தாமான் யாயாசானில் செவ்வாய்க்கிழமை அச்சம்பவம் நிகழ்ந்தது.
காலை 11 மணியளவில் பூனையைக் காணாது அதன் உரிமையாளரான குடும்ப மாது தேடியுள்ளார்.
அப்போது தனது பக்கத்து வீட்டுக்காரர் ஏதோ ஒரு பொருளை கால்வாயில் தள்ளுவதை அவர் கண்டார்.
சென்று பார்த்தால், அவர் ஆசையாய் வளர்த்து வந்த பூனை அங்கு இரத்த வெள்ளத்தில் கிடந்தது.
இதையடுத்து அவர் போலீஸில் புகார் செய்தார்.
CCTV கேமரா பதிவைப் போட்டு பார்த்ததில், சந்தேக நபர் அப்பூனையை கொடுமைப்படுத்தியது உறுதியானது.
அப்பூனை அங்கு வருவது பிடிக்காத காரணத்தாலேயே அதனை அடித்ததை, விசாரணையில் அம்முதியவர் ஒப்புக் கொண்டதாக செகாமாட் போலீஸ் கூறியது.
அச்சம்பவம் குற்றவியல் சட்டம், 2015 விலங்குகள் நலச் சட்டம் மற்றும் 1998 தொடர்பு-பல்லூடகச் சட்டங்களின் கீழும் விசாரிக்கப்படுகிறது.