
சுங்கை பூலோ, ஜூன்-15 – சிலாங்கூர், Puncak Alam-மில் குழந்தைப் பராமரிப்பாளரது வீட்டில் குளிப்பாட்டும் போது கைநழுவி விழுந்து 10 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
வெள்ளிக்கிழமை இரவு இத்துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக, சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன்ட் Mohd Hafiz Muhammad Nor தெரிவித்தார்.
அன்றிரவு 10.40 மணியளவில் Puncak Alam UiTM மருத்துவமனையிலிருந்து புகார் கிடைத்ததாக அவர் சொன்னார்.
அம்புலன்ஸ் வண்டியில் சுயநினைவற்ற நிலையில் கொண்டு வரப்பட்ட குழந்தை இரவு 7.30 மணிக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது.
சுமார் 22 நிமிடங்களுக்கு சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனில்லாமல் போனது.
சவப்பரிசோதனை அறிக்கை வெளியாகும் வரை திடீர் மரணமாக இச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தையின் தாயும் போலீஸிஸ் புகார் செய்துள்ள நிலையில், குழந்தைப் பராமரிப்பாளரின் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
விசாரணையைப் பாதிக்கும் வகையில் யூகங்களை எழுப்ப வேண்டாமென பொது மக்களை போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.