
ஜோகூர் பாரு – ஜூன் 13 – வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் உள்ள கெம்பாஸ் டோல் பிளாசாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லோரி ஓட்டுநர் ஹாரன் அடித்ததால் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கிய ஆடவனை போலீசார் தேடி வருகின்றனர். பிற்பகல் 2.30 மணியளவில் நடந்த இந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி, பின்னர் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோ முதலில் முகநூலில் பதிவேற்றப்பட்டு பின்னர் ஆன்லைனில் பரவலாகப் பரவியது என்று வட ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் துணை கமிஷனர் பல்வீர் சிங் மஹிந்தர் சிங் ( Balveer Singh Mahindar Siingh) தெரிவித்தார்.
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் உள்ள கெம்பாஸ் டோல் பிளாசாவில் இரண்டு ஆண்களுக்கு இடையே நடந்த சண்டையைக் காட்டும் காணொளியை பேஸ்புக்கில் போலீசார் கண்டறிந்தனர் என்று வெளியிட்ட அறிக்கையொன்றில் பல்வீர் சிங் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ஜூன் 8 ஆம்தேதி மாலை மணி 5.35 அளவில் போலீசில் புகார் செய்யபப்ட்டது.
அதே வேளையில் பாதிக்கப்பட்ட நபரும் லோரி ஓட்டுநருமான 31 வயதுடை ஆடவரும் தாம் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசில் புகார் செய்துள்ளார். கெம்பாஸ் டோல் சாவடியில் பிற்பகல் மணி 2.30 அளவில் அந்த சம்பவம் நடந்துள்ளது விசாரணயின் மூலம் தெரியவருகிறது.