Latestமலேசியா

கோலாலம்பூர் இரவு விடுதியில் அதிரடி சோதனை குறைந்தது 200 வெளிநாட்டினர் கைது

கோலாலம்பூர் – ஜூன் 12 – இன்று அதிகாலை, புடுவில்
dugem இசையை வழங்கும் ஒரு இரவு விடுதியில் குடிநுழைவுத்துறை நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 200 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து புத்ராஜெயாவில்லுள்ள குடிநுழைவுத்துறையின் அமலாக்கப் பிரிவினர் இரண்டு வார காலம் மேற்கொண்ட புலனாய்வு தகவல்கள் திரட்டியதைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. “டுகெம்” என்பது ஒளிரும் உலகம் என்பதன் சுருக்கமாகும், இது இரவு வாழ்க்கை காட்சியைக் குறிக்கிறது, குறிப்பாக இரவு விடுதி மற்றும் டிஸ்கோ விடுதிகளை குறிக்கிறது. இந்த பேச்சின் வழக்கு சொல் மது அருந்துதல் அல்லது சட்டவிரோத பொருட்களை எடுத்துக்கொள்வது தொடர்பானதாகும்.

“தேசிய பதிவுத் துறையைச் சேர்ந்த 11 அதிகாரிகள் உட்பட
129 அதிகாரிகள் கொண்ட நடவடிக்கை குழு அந்த இரவு விடுதிக்கு அனுப்பப்பட்டது. தொடக்கத்தில் 310 தனிப்பட்ட நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த 128 ஆண்கள், 116 பெண்கள் மற்றும் 66 மலேசிய பிரஜைகளும் அடங்குவர். 185 இந்தோனேசியர்களில் 106 ஆடவர்கள், 79 பெண்கள் , நேப்பாள ஆடவர் ஒருவர் உட்பட 21 முதல் 35 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் குடிநுழைவு தொடர்பான பல்வேறு குற்றங்களுக்கான கைது செய்யப்பட்டனர். நாட்டில் கூடுதலாக தங்கியிருந்தது மற்றும் செல்லத்தக்க பயண ஆவணங்களை கொண்டிருக்காத குற்றங்களும் அவற்றில் அடங்கும். அவர்கள் அனைவரும் விசாரணைக்காக KLIA மற்றும் Lenggeng குடிநுழைவு முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். அந்த விடுதியின் மேல் அதிகாரி, பரமரிப்பாளர் மற்றும் பெண் டி,ஜே ஆகியோர் உட்பட எண்மருக்கு சம்மன்கள் வழங்கப்பட்டதாக குடிநுழைவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!