Latestமலேசியா

கோலாலம்பூர் முன்னாள் கால்பந்து வீரர் கோபிநாத் 52 வது வயதில் மறைவு

கோலாலம்பூர் – மே-25 – முன்பு கோலாலம்பூர் கால்பந்து அணிக்கு விளையாடியவரான T. கோபிநாத், cardiac arrest எனப்படும் திடீர் இதய முடக்கம் காரணமாக 51 வயதில் நேற்று காலமானார்.

நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவரான கோபிநாத், 1992 முதல் கோலாலம்பூருக்கு விளையாடி 1993 மற்றும் 1994-ஆம் ஆண்டுகளில் FA கிண்ணத்தை வென்றார். எனினும் தனது கால்பந்து வாழ்க்கையின் உச்சக்கட்டத்தை நெருங்கும் முன்னரே காயப் பிரச்னை அவரை வாட்டி வதைத்தது.

இதனால் 19 தடவை முட்டிக் காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டு, 1999-ல் வெறும் 25 வயதிலேயே தீவிர கால்பந்திலிருந்து கோபிநாத் ஓய்வுப் பெற்றார். ஓய்வுப் பெறுவதற்கு முன் சிறிது காலம் அவர் பேராக் அணிக்கும் விளையாடியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!