Latestமலேசியா

சட்டவிரோத இணைய சூதாட்ட தளங்களை ஊக்குவித்தனர்; 27 பேர் கைது

கோலாலம்பூர், ஜூன் 14 – சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டத் தளங்களை ஊக்குவித்ததாகக் கூறப்படும் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த 27 பேர் கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜோகூர், பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் 21 முதல் 35 வயதுக்குட்பட்ட 23 பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் வியாழக்கிழமை தடுத்து வைக்கப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநர் கமிஷனர் டத்தோஸ்ரீ முகமட் சுஹாய்லி முகமட் ஜெய்ன் ( Shuhaily Mohd Zain ) தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இணைய சூதாட்ட கும்பல்கள் சந்தேக நபர்களை வேலைக்கு அமர்த்தியதும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. செல்வாக்கு பெற்றவர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஒரு சமூக ஊடக தளத்திற்கு 1,500 ரிங்கிட் மற்றும் 8,000 ரிங்கிட் வரை செலுத்தப்படுகிறது. செல்வாக்கு பெற்றவர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட சமூக ஊடக தளங்களில் செயலில் இருப்பதாக நம்புவதாக இன்று புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முகமட் சுஹாய்லி தெரிவித்தார். இந்த நடவடிக்கையின்போது 30 கை தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!