Latestமலேசியா

சட்டவிரோத வேட்டையில் ஈடுபட்ட மூன்று கம்போடியர்கள் கைது

குவந்தான், ஜூன் 27 – சட்டவிரோத வேட்டையில் ஈடுபட்ட  கம்போடியாவைச் சேர்ந்த மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் வேட்டையாடிய சில வனைவிலங்குகளும் பறிமுதல்   செய்யப்பட்டன. குவந்தானுக்கு அருகே   Simpan  Berkelah   காட்டுப் பகுதியில் அவர்கள் முகாமிட்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக   பஹாங்   வனவிலங்கு  மற்றும் பூங்காத்துறையின்   இயக்குநர்   ரோஷிடான்   முகமட்   யாசின் ( Rozidan   Md Yasin  )  தெரிவித்தார்.  சம்பந்தப்பட்ட காட்டுப்  பகுதியில் சட்டவிரோதமாக  வேட்டையாடுவோருக்கு எதிராக  செவ்வாய்க்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட  சிறப்பு சோதனை நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்த நடவடிக்கையின்போது வேட்டைக்கு பயன்படுத்தப்படும்  வலைகள் உட்பட பல்வேறு  சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.   அவர்கள் அனைவரும்   விசாரணைக்காக  ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  2010 ஆம் ஆண்டின் வனவிலங்கு சட்டம்  மற்றும்  திருத்தப்பட்ட  வனவிலங்குகள் மறுவாழ்வு  சட்டத்தின் கீழ்   இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக    ரோஷிடான் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!