Latestமலேசியா

சரவாக்கில் பங்கரம்; தாத்தா கண் முன்னே பேத்தியை இழுத்துச் சென்ற முதலை

கூச்சிங், செப்டம்பர் -19, சரவாக், பிந்துலுவில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 6 வயது பேத்தி தாத்தாவின் கண்ணெதிரிலேயே முதலைக்கு இரையானாள்.

அத்துயரச் சம்பவம் Tatau, Kambung Seberang Lama செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து Tatau தீயணைப்பு மீட்புத் துறையின் 6 பேர் கொண்ட குழு சம்பவ இடம் விரைந்தது.

தன் கண் முன்னே முதலை பேத்தியை இழுத்துச் சென்றதாக அம்முதியவர் தெரிவித்தார்.

இதையடுத்து Jetty மற்றும் ஆற்றங்கரை சுற்றிலும் அந்த இரவிலேயே தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

எனினும் இதுவரை அச்சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!