Latestமலேசியா

சிறார் ஆபாச காணொளி வைத்திருந்த குற்றச்சாட்டை பல்கலைக்கழக மாணவன் ஒப்புக்கொண்டான்

மூவார், ஜூலை 10 – சிறார் ஆபாச காணொளி வைத்திருந்த குற்றச்சாட்டை தனியார் மருத்துவ பல்கலைழக்க மாணவன் ஒருவன் ஒப்புக்கொண்டான். தேவாலயத்தின் கழிவறையில் சிறார்களின் ஆபாச புகைப்படங்களை கைதொலைபேசியில் பதிவு செய்ததாக 20 வயதுடைய டெஷ்மோன்ட் டான் சீ யோங் ( Desmond Tan Chee Yong ) என்ற மாணவன் மீது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அபு பாக்கார் மனாட் ( Abu Bakar Manat) முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி Sialin வர்த்தக மையத்திலுள்ள தேவாலயத்தில் இரவு 9 மணியளவில் அவன் அக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் 5 ஆண்டுவரை சிறை அல்லது 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது இவையிரண்டும் விதிக்கப்படும். 2017 ஆம் ஆண்டின் சிறார் பாலியல் குற்றங்கள் சட்டத்தின் 10ஆவது விதியின் கீழ் அந்த மாணவன் மீது மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அந்த கட்டடத்தின் மூன்றாவது மாடியிலுள்ள கழிவறைக்கு சென்று அங்கு ராயா பணக் கவர் ஒன்றில் கை தொலைபேசியை வைத்துவிட்டு பிறகு ஒரு மணிநேரத்திற்குப் பின் அதனை அந்த ஆடவன் எடுத்துச் சென்றதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

அந்த கேமராவில் 5 பிள்ளைகள் மற்றும் நான்கு பெரியோர்கள் குளிப்பது மற்றும் சிறுநீர் கழிக்கும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அந்த ஆடவன் 7,000 ரிங்கிட் ஜாமினில் விடுவிக்கப்பட்டதேடு இது தொடர்பாக வழக்கு விசாரணை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கு விசாரணை முடிவுறும்வரை மூவார் மாவட்ட போலீஸ் நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் ஆஜாராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆபாசப் படங்களை வைத்திருந்தாகவும் தண்டனைச் சட்டத்தின் 292 விதியின் கீழ் அவன் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மேலும் ஒரு குற்றச்சாட்டும் கொண்டுவரப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!