Latestமலேசியா

சுங்கை பூலோ அடுக்குமாடி வீட்டில் தீ; மூச்சுத் திணறிய மூவர்

சுங்கை பூலோ, மே-22 – சிலாங்கூர், சுங்கை பூலோ, புக்கிட் ரஹ்மான் புத்ராவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ ஏற்பட்ட வீட்டில் மூவர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர்.

இன்று காலை 6.30 மணியளவில் 16-ஆவது மாடியில் அச்சம்பவம் ஏற்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு – மீட்புத் துறைத் தலைவர் வான் மொஹமட் ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

தகவல் கிடைத்து 8 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடம் விரைந்தனர்.

எனினும், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் வீட்டிலிருந்த மூவரும் வெளியே ஓடி தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.

தீ முழுமையாக அணைக்கப்பட்ட நிலையில், அவ்வீடு 80 விழுக்காடு சேதத்தைச் சந்தித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!