Latestஉலகம்

சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு; மோடி அரசின் அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு

புது டெல்லி, மே-1, சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா தனது முதல் அதிகாரப்பூர்வ சாதிக் கணக்கெடுப்பை நடத்தவிருக்கிறது.

அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து இந்த சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்தப்படுமென, இந்திய அரசாங்கம் நேற்று அறிவித்தது.

இந்தியாவில் ஒருவரின் வாழ்க்கை நிலையை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய அம்சமாக சாதி உள்ளது.

உயர் சாதியினர் வேரூன்றிய கலாச்சார சலுகைகளின் பயனாளிகளாகவும், கீழ் சாதியினர் வேரூன்றிய பாகுபாட்டாலும் காலங்காலமாக அவதிப்படுகின்றனர்.

சுருக்கமாகச் சொன்னால் இரு பிரிவுக்கும் இடையே ஒரு கடுமையான ஏற்றத் தாழ்வு உள்ளது.

இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர், செயல்பாடு மற்றும் சமூக அந்தஸ்தால் இந்துக்களை பிரிக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையான சமூக படிநிலையின் கீழ் மட்டத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மோடி அரசாங்கத்தின் இவ்வறிவிப்புக்கு, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகக் கடைசியாக 2011-ல் மேற்கொள்ளப்பட்டது.

அடுத்த கணக்கெடுப்பு 2021-ல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்; ஆனால் கோவிட் பரவலால் அது மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் புதியக் கணக்கெடுப்பு எப்போது நடைபெறும் என இன்னும் அறிவிக்கப்படவில்லை

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!