
கோலாலம்பூர், ஆகஸ்ட்-12-சிலாங்கூரில் உள்ள சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது.
அடுத்த பொதுத் தேர்தல் வரை இந்தத் தொகுதி காலியாகவே இருக்கும் என தேர்தல் ஆணையம் SPR உறுதிப்படுத்தியுள்ளது.
அங்கு 3 முறை பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வோங் சென் (Wong Chen) திங்கட்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொகுதி காலியானது குறித்து மக்களவை சபாநாயகர் தான் ஸ்ரீ ஜொஹாரி அப்துல், SPR-ருக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், கூட்டரசு அரசியலமைப்பின் கீழ், இந்த இடைவெளியை நிரப்புவதற்கான தேவை எதுவும் தற்போது இல்லை என SPR டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹருண் தெரிவித்தார்.
நாட்டின் மிகப் பெரிய நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான சுபாங்கில், கடந்த பொதுத் தேர்தலில் சுமார் 115,000 வாக்குகள் வித்தியாசத்தில் Wong Chen வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.



