Latestமலேசியா

சையிட் சாடிக் தவறு செய்துள்ளார் ; டிரையத்லான் போட்டியில் அவருக்கு வழங்கப்பட்ட மூன்றாவது இடம் ‘முடிக்கவில்லை’ என மாற்றப்பட்டது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 10 – கடந்த வாரம் இறுதியில், 2024 டெசாரு டிரையத்லான் (Triathlon) போட்டியில், நிகழ்ந்த தவறு தமக்கு மூன்றாவது இடம் வழங்க வழிவகுத்தது என்பதை, சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் ஒப்புக் கொண்டுள்ளார்.

அதனால், தற்போது அந்த மூவார் நாடாளுமன்ற உறுப்பினரின் நிலை, “போட்டியை முடிக்கவில்லை” என மாற்றப்பட்டுள்ளது.

அப்போட்டியின் தொழில்நுட்ப குழுவிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை, தமது விவேக கைக்கடிகார தரவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தான், தவறு நிகழ்ந்திருப்பது தமக்கு தெரிய வந்ததாக சையிட் சாடிக் தெரிவித்தார்.

அதனால், அந்த தவறுக்கு முழு பொறுப்பேற்று,
டிரையத்லான் ஏற்பாட்டாளரிடமும், பங்கேற்பாளர்களிடமும்
மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் சையிட் சாடிக் கூறியுள்ளார்.

முன்னதாக, டெசாரு டிரையத்லான் போட்டியின், மூன்று சைக்கிளோட்ட சுழற்சிகளை சையிட் சாடிக் முடிக்கவில்லை எனவும், இரண்டை மட்டுமே அவர் நிறைவுச் செய்தார் எனவும் அடையாளம் தெரியாத சமூக ஊடக கணக்கு வாயிலாக குற்றச்சாட்டப்பட்டது.

எனினும், டிரையத்லான் போட்டியின் போது தாம் ஏமாற்றியதாக கூறப்பட்ட அந்த குற்றச்சாட்டை, சையிட் சாடிக் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!