
கோலாலம்பூர், ஜூன் 11- கடையொன்றில், உள்ளூர் வாசியான முதியவர் ஒருவருக்கும், வெளிநாட்டு தம்பதியினருக்கும்,ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் கைகளப்பாக மாறி அம்முதியவர் கடுமையாக தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
பணம் செலுத்துமிடத்தில் தொடங்கிய சண்டையில், அந்த வெளிநாட்டு நபர் முதியவரை கடைக்கு வெளியே அடித்து தள்ளுவதை அக்காணொளியில் காண முடிகின்றது.
இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்த பாதுகாவலர் ஒருவர் கலகத்தை நிறுத்தாமல், வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்தது, வலைதளவாசிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், கொடூரமாக நடந்து கொண்ட வெளிநாட்டினரை காவலில் வைக்க வேண்டுமென்றும் பலர் கருத்துரைத்து வருகின்றனர்.