Latestமலேசியா

ஜெர்தே ஆற்றில் அடையாளம் தெரியாத உடல் கண்டுபிடிப்பு

திரெங்கானு 24 ஜூலை – பெசுட் மஸ்ஜிட் ஹட்டாரி, ஜெர்தே ஆற்றில், டி-ஷர்ட் மற்றும் கைலி அணிந்திருந்த அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

காலை 9.30 மணியளவில் ஜெர்தே ஆற்றின் கரையில் உடலைக் கண்டவர் உடனடியாக போலிசாருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, காலை மணி 9.45 அளவில் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை வந்தடைந்ததாக பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர், சுப்ரிடெண்டன்ட் அப்துல் ரொசாக் முஹமாட் (Abdul Rozak Muhammad) தெரிவித்தார். 

அதோடு, சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர் உடலின் நிலையைப் பரிசோதித்து, பின்னர் 11.20க்கு உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெசுட் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் எந்தக் குற்றச்செயலின் சான்றுகளும் இல்லையென்பதாலும் உடலில் காயங்கள் எதுவும் தெரியவில்லை என்பதாலும், இது திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக  ரொசாக் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!