
பட்னா, ஜூன்-22 – தனது கள்ளக்காதல் குறித்து 13 வயது மகனுக்குத் தெரிந்து விட்டதால், பாலூட்டி வளர்த்த மகனென்றும் பாராமல் அவனை படுகொலைச் செய்துள்ளார் இந்தியா, பீஹாரைச் சேர்ந்த ஒரு ‘கொடூர’ தாய்.
ரோமா குமாரி எனும் அம்மாது ஓர் ஆசிரியை என்பது கூடுதல் அதிர்ச்சியாகும்.
ஆசிரியர் பயிற்சியில் இருந்த போது ஓர் ஆடவருடன் ரோமாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அதுவே கள்ளக்காதலாக மாறியது.
விஷயம் எப்படியோ மகனுக்கு தெரிய வர, தாயுடன் அவன் சண்டைப் போட்டுள்ளான்.
தாயோ, எங்கே கணவருக்கு உண்மை தெரிந்து விடுமோ என்ற பயத்தில் மகனை அடித்தே கொன்றார்.
கொடூரம் அதோடு நிற்கவில்லை.
ஆதாரத்தை மறைக்கும் முயற்சியில், மகனின் உடலை சாலையோரப் புதரில் போட்டு அவர் தீ வைத்தார்.
இதில் ரோமாவுக்கு அவரின் கள்ளக்காதலன் நிர்மல் உடந்தை வேறு.
தீயில் கருகிய உடல் பின்னர் கண்டெடுக்கப்பட்டு போலீஸ் விசாரணையும் தொடங்கியது.
கடைசியில் ரோமா குமாரியின் குட்டு அம்பலமானது.
அவர் கைதாகி இப்போது விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்காதன் தலைமறைவாகி விட்டார்.
கட்டிய மனைவியின் துரோகம், ஒரு பாவமும் அறியாத மகனின் கொடூர மரணம் என ஒரே நேரத்தில் இரட்டை அதிர்ச்சியில் மூழ்கியுள்ள ரோமா குமாரியின் கணவர், மனைவிக்கு மரண தண்டனை விதிக்க வலியுறுத்தி வருகிறார்.
இது மனிதாபிமானம் அல்லாத செயல் மட்டுமல்ல; மன்னிக்கவே முடியாத குற்றமென அவர் சொன்னார்.
ரோமா குமாரி, தனது பெண் பிள்ளையையும் அடித்துத் துன்புறுத்தினாரா என்பது குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.