Latestமலேசியா

தியோ பெங் ஹாக்கின் குடும்பத்தாரை, அடுத்த வாரம் பிரதமர் சந்திப்பார்

கோலாலம்பூர், ஜூலை 17 – மறைந்த தியோ பெங் ஹாக்கின் குடும்பத்தாரை, அடுத்த வாரம் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்திப்பார்.

அவர்கள் அரசாங்கத்திற்கு அனுப்பிய குறிப்பாணையை பரிசீலிக்க ஏதுவாக, அந்த சந்திப்பு நடத்தப்படுவதாக, பிரதமர் சொன்னார்.

பேரரசர் அரியணை அமரும் விழா மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் அந்த சந்திப்பு நடைபெறும்.

இவ்வாரம் நெடுகிலும், பிரதமருக்கு வேலை பழு அதிகம் என்பதால், அடுத்த வாரத்திற்கு அந்த சந்திப்ப்பு அட்டவணையிடப்பட்டுள்ளது.

முன்னதாக, வெளிப்படையான விசாரணை கோரி, மூன்று நாட்கள் 96 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு நாடாளுமன்றம் வந்தடைந்த, தியோ பெங் ஹாக்கின் ஆதரவாளர்களை போலீஸ் தடுக்க முயன்றதால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!