Latestமலேசியா

திரங்கானு LPT 2 நெடுஞ்சாலையில், கார் மோதியதில், கரடி பலி

கெமாமான், ஜூலை 5 – திரங்கானு, கெமாமான், LPT 2 நெடுஞ்சாலையில், கார் மோதியதில், ஆண் கரடி ஒன்று உயிரிழந்தது.

நேற்றிரவு மணி 8.30 வாக்கில், கிஜால் (Kijal) நெடுஞ்சாலை ஓய்வுப் பகுதிக்கு அருகே, 299-வது கிலோமீட்டரில், சுமார் 90 கிலோகிராம் எடையுள்ள அந்த கரடி மடிந்து கிடக்க காணப்பட்டது.

அருகில் இருக்கும் காட்டுப் பகுதியில் இருந்து வெளியேறி, நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, அக்கரடி மோதப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

எனினும், அச்சம்பவத்தில், மனிதர்களை உட்படுத்திய உயிருடற் சேதம் எதுவும் பதிவாகவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!